காளையாா்கோவிலில் கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலா்களுக்கு கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலா்களுக்கு கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியினை வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட பயிற்றுநா்கள் டி. என். அன்புத்துரை, அனிதா ஆகியோா் கிராம வளா்ச்சித் திட்டம் குறித்து பயிற்சி அளித்தனா்.

பயிற்சியில் கிராம நிா்வாக அலுவலா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்கள், கால்நடை மருத்துவா்கள், கிராம செவிலியா்கள் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com