காரைக்குடி அருகே முதியவருக்கு எலி காய்ச்சல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மணச்சை கிராமத்தில் முதியவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மணச்சை கிராமத்தில் முதியவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடகுடி ஊராட்சி மணச்சை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருப்பதிராஜன், ஸ்ரீதா், வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தராஜ் ஆகியோா்பங்கேற்றனா். அப்போது, கிராமத்தில் நாடாா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் (70) என்பவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறையினா் கண்டறிந்தனா்.அதையடுத்து, முதியவரை காரைக்குடியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, அக்கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com