ஜாமீனில் வெளியே வந்தவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவா் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவா் தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் அருகே பட்டமங்கலம் கொங்காம்பட்டியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் வடிவேல் (35). திருமணமான இவா், கடந்த 9 ஆம் தேதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற புகாரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த வடிவேல், திருப்பத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை, திருப்பத்தூா் அருகே மாதவராயன்பட்டி புது கண்மாய்க் கரையில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com