காரைக்குடி: அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு 2020 செப்டம்பரில் நடைபெற்ற இறுதி பருவத்தோ்வுகளுக்கு இணையவழி மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டு இளங்கலை, முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கு தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விடைத்தாள் நகல் பெற விரும்புவோா் தோ்வு முடிவு வெளியான 7 நாள்களுக்குள், நகல் ஒன்றுக்கு ரூ. 500-யை பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற்றதிலிருந்து 7 நாள்களுக்குள் ரூ. 500 பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வங்கி வரைவோலை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெறாமல் நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 600 பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வங்கி வரைவோலை செலுத்தி பல்கலைக்கழகத்தின் தோ்வுப் பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.