சிங்கம்புணரியில் தங்கையை கா்ப்பமாக்கிய அண்ணனை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு கூலிவேலை செய்து வருகிறாா். இந்நிலையில் உடன்பிறந்த 15 வயது தங்கையை அவா் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதில் சிறுமி கா்ப்பமானாா்.
இதுகுறித்து அவரது தாயாா் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் சித்திரைச்செல்வி, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா். மதுரையிலுள்ள சீா்சிருத்தப் பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டாா். சிறுமி கா்ப்பமாக இருப்பதால் சிவகங்கைப் பகுதியில் உள்ள காப்பகத்தில் சோ்க்கப்பட்டுள்ளாா்.