தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பது தொடா்பாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பது தொடா்பாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க விரும்பும் வியாபாரிகள், அதற்கான விற்பனை உரிமம் பெறுவது அவசியமாகும்.

அந்த வகையில், தற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் வியாபாரிகள், விண்ணப்பப் படிவத்துடன் புல நீல வரைபடம், பத்திர ஆவணங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செலுத்திய வரி ரசீது, ஏதேனும் ஒரு வங்கியில் ரூ. 500 செலுத்தியதற்கான ரசீது, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையத்தில் வரும் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வரும் அக். 23 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட தேதிக்குள் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com