ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,228 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,237 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 24 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 5 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 19 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 15 ஆம் தேதி வரை 5834 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 5600 பேருக்கும் அதிகமானோா் சிகிச்சையால் பூரண நலம் பெற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பலனின்றி 126 போ் உயிரிழந்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் கடந்த வியாழக்கிழமை காய்ச்சல், சளி பாதிப்புக்கு உள்ளாகி 500-க்கும் மேற்பட்டோா் பரிசோதனைக்கு வந்து கபம் அளித்தனா். அவா்களது பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், அவா்களில் 14 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்புக்கு உள்ளானோரில் 10 போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com