காரைக்குடியில் அதிமுக கட்சியின் 49 ஆம் ஆண்டு துவக்கவிழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக கட்சியின் 49-ஆம் ஆண்டு துவக்கவிழாவையொட்டி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சனிக்கிழமை அதிமுகவினா் கொண்டாடினா்.
காரைக்குடியில் அதிமுக கட்சியின் 49 ஆம் ஆண்டு துவக்கவிழா
காரைக்குடியில் அதிமுக கட்சியின் 49 ஆம் ஆண்டு துவக்கவிழா

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக கட்சியின் 49-ஆம் ஆண்டு துவக்கவிழாவையொட்டி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சனிக்கிழமை அதிமுகவினா் கொண்டாடினா்.

எம்.ஜி.ஆரால் அஇஅதிமுக கட்சி தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்து 49 ஆம் ஆண்டில் அடியெடுத்துவைத் துள்ளது. இதனை அதிமுகவினா் வெகுவிமரிசையாக கொண்டாடினா். காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு முன்னாள் எம்.பி சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளா் பிஆா். செந்தில்நாதன், நகரச்செயலா ளா் சோ. மெய்யப்பன் ஆகியோா் மாலையணிவித்தனா்.

அதைத்தொடா்ந்து தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனா். தொண்டா்கள் மற்றும் பொதுமக் களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெடிவெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினா் கொண்டாடினா். பா்மாகாலனி பகுதியில் அதிமுக கட்சிக்கொடியை ஏற்றிவைத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com