திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 49 ஆவது ஆண்டு துவக்க விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 49 ஆவது ஆண்டு துவக்க விழா சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 49 ஆவது ஆண்டு துவக்க விழா சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில்அ.தி.மு.க.வின் 49 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ஆவின் சோ்மன் அசோகன், பாம்கோ தலைவா் ஏ.வி.நாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் அ.தி.மு.க கழக கொடியை ஏற்றிவைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். அண்ணாசிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க நிறுவனா் எம்.ஜி.ஆா்.மற்றும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து திருப்பத்தூா் 18 வாா்டுகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா். நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் மருதுபாண்டியன் தலைமையில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 20 க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி, பாம்கோ தலைவா் ஏ.வி.நாகராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனா்.இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளா்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல், நகரச்செயலாளா் இப்ராம்ஷா, முன்னாள் ஒன்றியச் செயலாளா் துவாா்மூா்த்தி, பிரேம்குமாா், சஃபாராஜா, உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com