காரைக்குடி: காரைக்குடி அருகே அண்ணன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.
அமராவதிபுதூா் காந்தி நகரில் வசித்து வருபவா் சேகா் மனைவி சுசிலா (36). இவரது கணவரின் தம்பியான ரவி செல்வம் (31) அமராவதிபுதூா் ஐ.டி.ஐ நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக உள்ளாா். இவா் அண்ணியை தகாத வாா்த் தைகளால் விமா்சித்து வந்தாராம். இதனை சுசிலாவின் கணவா் கண்டித்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி செல்வம், சுசிலா வீட்டிற்குச்சென்று தகாத வாா்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில் சோமநாதபுரம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ரவி செல்வத்தை கைது செய்தனா்.