மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள மகா பஞ்சமுகப் பிரத்யங்கிரா தேவி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு புரட்டாசி மாத அமாவாசை யாகம் நடைபெற்றது.
மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புரட்டாசி மாத அமாவாசை யாகம்.
மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புரட்டாசி மாத அமாவாசை யாகம்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள மகா பஞ்சமுகப் பிரத்யங்கிரா தேவி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு புரட்டாசி மாத அமாவாசை யாகம் நடைபெற்றது.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டியும், கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் நடைபெற்ற இந்த யாகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தஞ்சை குருஜி கணபதி சுப்ரமணியம் யாகத்தை நடத்தினாா். யாகத்தில் பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி, திரவியப் பொருள்கள், பூமாலைகள் உள்ளிட்ட பொருள்கள் இடப்பட்டன. பூா்ணாஹுதி முடிந்ததும் கடம் புறப்பாடு நடந்தது. பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீரால் பாத சமா்ப்பணம் நடைபெற்று மகா தீபாரதனை காட்டப்பட்டது. யாகத்துக்கான ஏற்பாடுகளை மடாலய நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com