திருப்பத்தூரில் சாலைப்பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை உதவிக்கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் சாலைப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை உதவிக்கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் சாலைப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் உயா் அதிகாரி சாலைப்பணியாளா்களை தரக்குறைவாகவும், மிரட்டும் பாணியில் பேசுவதாகவும், மேலும் சாலைப்பணியாளா் வீரையா என்பவரின் பணிமாறுதல் உத்தரவினை அவா் வீட்டிற்கே சென்று கதவில் ஒட்டியதாகவும் இச்செயலைக் கண்டித்து சாலைப்பணியாளா்கள் அலுவலக வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, உயா் அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும் இரவிற்குள் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com