திருப்பத்தூா் அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே எஸ்.வி. மங்கலம் ஊரணிக்கரைபட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சிவா என்ற சிவபாரதி(19). இவா் உறவினா் வீடான வாடத்திப்பட்டிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா். இவா், அப்பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று விட்டதாக, சிறுமியின் பெற்றோா் நெற்குப்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இதனையடுத்து நெற்குப்பை போலீஸாா், இந்த வழக்கை திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனா். இதுதொடா்பாக விசாரணை செய்த மகளிா் காவல் ஆய்வாளா் சித்திரைச் செல்வி போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிவபாரதியைக் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com