ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 19 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை/ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 19 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, திருப்பத்தூா், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 5,362 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,371 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 35 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 2 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 32 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 26 ஆம் தேதி வரையில் 5947 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அவா்களில் 130 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். கரோனா பாதித்தவா்களில் 5700 பேருக்கும் அதிகமானோா் பூரண நலம் பெற்ால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருந்தவா்களிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 10 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது.

அதில் 7 போ் பெண்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 40 போ் வரை மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com