சிவகங்கை மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th September 2020 12:25 AM | Last Updated : 04th September 2020 12:25 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 29 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 4,117 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, வியாழக்கிழமை மேலும் 29 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,146 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 90 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 21 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 69 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.