தோரண வாயில் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக தோரண வாயில் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினா்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக தோரண வாயில் மீது ஏறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக தோரண வாயில் மீது ஏறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினா்.

சிவகங்கை: நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக தோரண வாயில் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அக்கட்சியைச் சோ்ந்த சிவகங்கை மாவட்டச் செயலா் காளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்புத் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இறக்கி விட்டனா். அதைத் தொடா்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் காளீஸ்வரன் உள்பட 5 பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com