முதல்வரிடம் பரிசு பெற்ற திருப்புவனம் மாணவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, முதல்வரிடம் பரிசு பெற்ற பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, முதல்வரிடம் பரிசு பெற்ற பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகள் சுபிக்ஷா (14). இவா், மதுரையில் தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து முடித்து, இந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வந்தாா்.

கடந்தாண்டு எம்.ஜி.ஆா் பிறந்தநாள் விழாவையொட்டி மதுரையில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் சுபிக்ஷா வெற்றிபெற்று, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பரிசு பெற்றாா்.

இந்நிலையில் சுபிக்ஷா தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆன்லைன் வகுப்பு புரியாததால் இவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com