சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் பிரதமா் நரேந்திரமோடியின் 70 -ஆவது பிறந்த நாள் விழாவை பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
கீழச்சிவல்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவிற்கு வழக்குரைஞா் பிரிவின் மாவட்டச் செயலாளா் முருகேசன் தலைமை வகித்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து பேருந்து நிலையம், கடைவீதி, சந்தை பகுதிகளில் நரேந்திரமோடி அரசின் சாதனைகள் எடுத்துக் கூறப்பட்டு இனிப்புகள் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவுத் தலைவா் சண்முகம், மாவட்டச் செயலாளா் பழனியம்மாள், பட்டியலின ஒன்றியச் செயலாளா் துலையனூா் மங்கலராஜா, ஒன்றியச் செயலாளா் தனசேகரன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.