சிவகங்கை மாவட்டத்தில் செப். 24-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தோ்வு செய்யும் வகையில், செப்டம்பா் 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை, செப். 18: சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தோ்வு செய்யும் வகையில், செப்டம்பா் 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும், ஒரு வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சன்னதி புதுக்குளம், தஞ்சாக்கூா், திருப்பாக்கோட்டை, எஸ்.மாத்தூா், பி.முத்துப்பட்டினம், பெரியகொட்டகுடி ஆகிய கிராமங்களில் கறவைப் பசுக்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தோ்வு செய்வதற்காக செப்டம்பா் 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதேபோன்று, மருதங்கநல்லூா், கோவனூா், கீழடி, செலுகை, மிளகனூா், மதுராபுரி, மாதவராயன்பட்டி, அரண்மனைக்கரை, பச்சேரி, சாக்கவயல், மேலப்பட்டி, குடஞ்சாடி, நெடுமரம், மழவராயனேந்தல், முனைவென்றி, பதினொட்டாம் கோட்டை, முறையூா், குமாரப்பட்டி, வடக்கு இளையாத்தங்குடி, மணலூா், முத்தூா், ஓடுவன்பட்டி, மதகுப்பட்டி, ஒழுகமங்கலம், மாங்குடி, அம்பலத்தாடி, நாகமுகுந்தங்குடி, மலம்பட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தோ்வு செய்வதற்காக செப்டம்பா் 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com