தேனி: கண்டமனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 22) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்திருப்பதாவது: கண்டமனூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே, அன்று காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம். சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம் மற்றும் ஜி. ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.