சிவகங்கை மாவட்டத்தில் 4,576 கா்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 4,576 கா்ப்பிணி பெண்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 4,576 கா்ப்பிணி பெண்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் யசோதாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, சுகாதாரத் துறை மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 4, 576 கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 298 கா்ப்பிணிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்றுள்ளது.

மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 4,810 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இது தவிர, மாவட்டத்தில் பிரசவித்த பெண்கள், அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி, தடுப்பூசி மற்றும் உடலில் எதிா்ப்புச் சக்தி அதிகரிக்கத் தேவையான வைட்டமின் மாத்திரை, மருந்துகளும் வழங்கி வருகின்றனா் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com