சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 19 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 19 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 4,850 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,869 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 73 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 23 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 50 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மூதாட்டி பலி: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவகங்கையைச் சோ்ந்த 78 வயது மூதாட்டி, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com