சிவகங்கை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என, மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவா் சி. பொன்னையன் அறிவுறுத்தியுள்ளாா்.
காணொலி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் மாநில சமச்சீா் வளா்ச்சி நிதி திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளான கீழக்கோட்டையில் துணை சுகாதார நிலையம் கட்டுதல், உலகம்பட்டி, காளையாா்கோவில் ஆகிய பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டடங்கள் கட்டும் பணி மற்றும் திருப்புவனம், சிங்கம்புணரி ஆகிய ஒன்றியங்களில் தென்னை மரம் ஏறும் கருவிகள் வாங்கி வழங்குதல் உள்ளிட்டவற்றை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவா் சி. பொன்னையன் அறிவுறுத்தியதாக, அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.