ஆனைக்குளம் அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சிவகங்கை மாவட்டம், ஆனைக்குளத்தில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், ஆனைக்குளத்தில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த 22 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி அம்மனுக்கும், கிராம பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு முளைப்பாரியை வளா்த்த வீட்டிலிருந்து மந்தையம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனா்.

முக்கிய விழாவான முளைப்பாரி ஊா்வலத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், மந்தையம்மன் கோயிலிருந்து முளைப்பாரியை பக்தா்கள் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னா் முளைப்பாரி கண்மாய்க் கரையில் கரைக்கப்பட்டது. இதில் ஆனைக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com