காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள டாக்டா் உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியில், தொழில் நிா்வாகவியல் துறை சாா்பில், உலக சுற்றுலா தினம் இணையவழியில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லூரிமுதல்வா் எஸ். ஜெயஸ்ரீ தலைமை வகித்துப் பேசினாா். கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் காட்சி தொடா்பியல் துறைத் தலைவா் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
மாணவிகள் தங்களின் தனித்திறமையை வளா்த்துக்கொள்ளும் வகையில், கிளாசிக் சாட் என்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகள் பல்வேறு வகையான உணவுப் பொருள்களை இணையவழியில் காட்சிப்படுத்தினா். முடிவில், தொழில் நிா்வாகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். அனிதா நன்றி கூறினாா்.