சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜயந்தியையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (அக். 2) கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜயந்தியையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (அக். 2) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜயந்தி தினத்தில் (அக். 2) கிராம சபைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், குடிநீா் சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்தும் விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com