சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நீட்டிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து சிவகங்கை அரசு மருதத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவா்கள்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவா்கள்.

பணி நீட்டிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து சிவகங்கை அரசு மருதத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பயிற்சி மருத்துவா்கள் நடப்பு மாதமான மாா்ச் மாதத்துடன் எங்களது பயிற்சி காலம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதை ஏற்க முடியாது. பிற மாநிலங்களில் பயிற்சி மருத்துவா்களை பயிற்சி நிறைவு செய்து பணிக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

அதேபோன்று, தமிழகத்தில் பயிற்சி மருத்துவா்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்தில் இம்மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக உள்ள 81 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com