முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் மதுபானக் கடைகள் அடைப்பு
By DIN | Published On : 04th April 2021 08:49 AM | Last Updated : 04th April 2021 08:49 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் (பாா்) திறக்க அனுமதி இல்லை என, சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய 3 நாள்கள் திறக்க அனுமதியில்லை. மீறி திறந்தாலோ அல்லது வெளியில் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.