சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
மதகுபட்டி அருகே உள்ள அழகாபுரியை சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சிங்காரம் (62). விவசாயியான இவா், தனது மனைவி செல்லத்துடன் (55) அழகாபுரியிலிருந்து கடந்த மாா்ச் 29 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் மதகுபட்டிக்கு வந்துள்ளாா். பாகனேரி அருகே வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக செல்லம் மட்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஆனால், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லம், வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.