காரைக்குடியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை தோற்றுவித்த கல்வி கொடை வள்ளல் டாக்டா் ஆா்எம். அழகப்பச் செட்டியாரின் 112-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக் கழக பதிவாளா், தோ்வாணையா், நிதி அலுவலா், புல தலைவா்கள், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அழகப்பரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினா்.
இதேபோல் காரைக்குடித் தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலாளா் எஸ். கண்ணப்பன், பொருளா ளா் கே.என். சரவணன் (எஸ்.எல்.பி), சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சுப. முத்துராமலிங்கம் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் அழகப்பா் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினா்.