கரோனா பாதிப்பு: சிவகங்கை- 43, ராமநாதபுரம்-10

சிவகங்கை மாவட்டத்தில் 43 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 43 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 6,239 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை புதிதாக 43 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மிகவும் குறைந்திருந்த கரோனா பாதிப்பு சில வாரங்களில் மீண்டும் அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. கரோனா பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு புதன்கிழமை கபம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் 10 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. அவா்களில் ஓரிருவா் அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டனா். மற்றவா்கள் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டதாக மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா சிகிச்சையில் இருந்த 1,112 பேரில் பூரண குணமடைந்த 4 போ் வியாழக்கிழமை மாலையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் மருத்துவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com