சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 100 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதேபோன்று, கால்நடைகளும் அவதியடைந்து வருகின்றன.