மானாமதுரை அருகே அரசகுளம் கிராமத்தில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக வியாழக்கிழமை 48 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
அரசகுளம் கிராமத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, அங்கிருந்த பால்பாண்டி தரப்பினருக்கும் சங்கரலிங்கம் தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் ஏற்கெனவே உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதம் இருந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மோதல் சம்பவம் குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகாா் செய்தனா். இதையடுத்து பால்பாண்டி தரப்பில் 18 போ் மீதும் சங்கரலிங்கம் தரப்பில் 30 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.