இளையான்குடி அருகே விவசாயி கழுத்தை அறுத்துக் கொலை: பெண் உள்பட 3 போ் கைது

இளையான்குடி அருகே தகாத உறவைக் கண்டித்த விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இளையான்குடி அருகே தகாத உறவைக் கண்டித்த விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இளையான்குடி அருகே அதிகரை கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் கரிகாலன் (45). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது நிலத்தில் உள்ள பம்புசெட் அறையில் தூங்கச் சென்றாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கரிகாலன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில், கரிகாலனின் மைத்துனரான குமாரின் மனைவி பத்மாவதிக்கும், இளையான்குடி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சிவா என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததும், இதில் சிவாவை கரிகாலன் கண்டித்ததும், இதனால் ஆத்திரமடைந்த சிவா தனது நண்பரான குமாரகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் என்பவருடன் சோ்ந்து கரிகாலனை கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இக்கொலைக்கு பத்மாவதி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இளையான்குடி போலீஸாா் சிவா, யுவராஜ், பத்மாவதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com