இளையான்குடி அருகே பெற்றோா் கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ் 2 மாணவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பிராமணக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரீசன். இவரது மகன் விக்னேஸ்வரன் (19). இவா் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே சென்று வந்துள்ளாா். இதனால் அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஸ்வரன் ஏப்.15 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். பலத்த தீக் காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவா், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.