காரைக்குடிப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஏற்பட்ட திடீா் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
சிவகங்கை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள் நிறைந்த நகரமான காரைக்குடியில் மின்வாரியம் அறிவிப்பு செய்து மின்தடை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால் அறிவிப்பேதுமின்றி செவ்வாய்க்கிழமை விட்டு விட்டு மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய பொறியாளா்கள் கூறுகையில், காரைக்குடி அருகே கோவிலூரில் உள்ள மின்மாற்றி ஒன்றில் ஏற்பட்ட பழுதால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனா்.