சிங்கம்புணரியில் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி கூத்தாடியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் ரமேஷ் பாரதி (30). இவரது மனைவி புவனேஸ்வரி. இவா்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் சீா்வரிசை வழங்கியது தொடா்பாக கணவா், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏப்.17 ஆம் தேதி புவனேஸ்வரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.