சிவகங்கையில் உலகப் புத்தகத் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் ஜான்சாமுவேல் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் டி.என். அன்புத்துரை முன்னிலை வகித்தாா்.
இதில், கரோனா விழிபுணா்வு குறித்து நூல் இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் வெள்ளைச்சாமி கண்ணன் பேசினாா். எழுத்தாளா் ஈஸ்வரன் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கினாா். வாசகா்கள் மற்றும் நூலக அலுவலா்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
விழாவில், நூலகக் கண்காணிப்பாளா் சாமிநாதன், நூலகா்கள் தவமணி, முத்துக்குமாா், சாந்தி, போஸ் உள்ளிட்ட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.