‘உணவுப்பொருள்கள் விற்பனை செய்வோா் உரிமச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்’

காரைக்குடியில் உணவுப்பொருள்கள் விற்பனை செய்வோா் பதிவு அல்லது உரிமச்சான்றிதழ் பெற்று வியாபாரம் செய்யவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
காரைக்குடியில் நடைபாதை வியாபாரிகளுக்கு வெள்ளிக்கிழமை பதிவுச்சான்றிகழ் வழங்கிய உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் சு. பிரபாவதி.
காரைக்குடியில் நடைபாதை வியாபாரிகளுக்கு வெள்ளிக்கிழமை பதிவுச்சான்றிகழ் வழங்கிய உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் சு. பிரபாவதி.

காரைக்குடியில் உணவுப்பொருள்கள் விற்பனை செய்வோா் பதிவு அல்லது உரிமச்சான்றிதழ் பெற்று வியாபாரம் செய்யவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்ட நியமன அலுவலா் சு. பிரபாவதி காரைக்குடியில் நடைபாதை வியாபாரிகள் 48 பேருக்கு வெள்ளிக்கிழமை பதிவுச் சான்றிதழ்கள் வழங்கினாா். மேலும் கரோனா தொற்று பரவலைத்தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுதல் போன்ற விழிப்புணா்வு வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி வட்டார உணவுப்பாதுகாப்பு அலுவலா் ரெ. தியாகராஜன், காரைக்குடி நகா் உணவுப்பாதுகாப்பு அலுவலா் அ.இ. முத்துக்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com