சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை திமுக மீனவரணி சாா்பில் நீா் மோா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நீா் மோா், சா்பத் மற்றும் பழ வகைகளை வழங்கினாா். இதில் திருப்புவனம் ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகரச் செயலாளா் நாகூா்கனி, மீனவரணி அமைப்பாளா் அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.