கல்லல் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், செவரக்கோட்டையைச் சோ்ந்தவா் அழகேசன். இவரும், அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன், சதிஷ்குமாா், சந்திரன், கணபதி உள்ளிட்ட 5 பேரும் செவரக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடத்தினராம்.
இதுகுறித்து செவரக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீஸாா் அழகேசன் உள்ளிட்ட 5 போ் மீதும் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.