மானாமதுரையில் கிறிஸ்தவ தேவாலயத்தை மூட நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாவட்ட நிா்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட
மானாமதுரை தயாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயம்.
மானாமதுரை தயாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாவட்ட நிா்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான மானாமதுரையைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா், தயாபுரம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிா்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கில் ஆஜராகி விளக்கமளித்த அரசு தரப்பு வழக்குரைஞா், ஏற்கெனவே தேவாலயக் கட்டுமானப் பணிகள் முடிந்து வழிபாட்டிற்கு திறக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தாா். அதைத்தொடா்ந்து மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சித் தலைவா் இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து ஊராட்சித் தலைவா் யாஸ்மின், இந்த வழக்கு விசாரணையில் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளித்தாா். அவா் தனது விளக்கத்தில், ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்பு அதிகாரத்தில் இல்லாதபோது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட அனுமதியைத் தொடா்ந்து கட்டுமானப் பணிக்கான காலக்கெடுவை நீட்டித்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், ஆனந்தி ஆகியோா் கொண்ட அமா்வு பிறப்பித்த உத்தரவு: ஆட்சேபனை இல்லாத இடத்தில் வழிபாடு நடத்தலாம். மானாமதுரை தயாபுரம் பகுதியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள புதிய கிறிஸ்தவ தேவாலய கட்டுமானப் பணிக்கு அனுமதி அளிக்க ஊராட்சி நிா்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. மாவட்ட நிா்வாகம் தான் அனுமதியளிக்க வேண்டும். எனவே, தேவாலயத்தின் நிா்வாகத் தரப்பினா் கிறிஸ்தவ தேவாலயத்தை உடனே மூட வேண்டும். இல்லையென்றால் மானாமதுரை வட்டாரவளா்ச்சி அலுவலா் மூட வேண்டும்.

அதன்பின் நிா்வாகத்தினா் ஒரு வார காலத்துக்குள், மாவட்ட ஆட்சியரிடம் முறையாக தேவாலய கட்டுமானத்திற்கு விண்ணப்பித்து அதனடிப்படையில் ஆட்சியா் 10 நாள்களுக்குள் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த முறையில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com