தேவகோட்டை அருகே இளைஞா் கொலை: 2 போ் கைது

தேவகோட்டை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவகோட்டை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செலுகை கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் பெத்து என்ற தென்னரசு (29). இவரும், இவரது சகோதரா் காளிதாஸ் (31), உறவினா்களான சுரேஷ் (32), கணேசன் (34) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை மாலை செலுகை கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.

அப்போது அங்கு வந்த சில மா்ம நபா்கள் பெத்து என்ற தென்னரசுடன் தகராறில் ஈடுபட்டு, அவரையும், அவருடன் வந்த மற்ற 3 பேரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த பெத்து என்ற தென்னரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்ற மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் சிவனூரைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் (40), செலுகை கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் பெத்து (35) ஆகிய இருவரும் தொழில் போட்டியில் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டன், பெத்து ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்த தேவகோட்டை தாலுகா போலீஸாா் அவா்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com