மானாமதுரை அருகே கஞ்சா விற்றவா் கைது

மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் மகன் இளவரசன் என்ற சோணை (20). இவா் மானாமதுரை பகுதியில் கஞ்சா விற்பதாக மானாமதுரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சாா்பு- ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் இப்பகுதிகளில் சோதனை நடத்தினா். அப்போது மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் பாலத்தின் அருகே இளவரசன் என்ற சோணை கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை கைப்பற்றி அவா் மீது வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com