சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி நிா்வாகம் இணைந்து இந்த முகாமை நடத்தின. இளையான்குடி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் பாலமுருகன், அரசு மருத்துவா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தனா்.