சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் லூா்துபிள்ளை மகன் சூசை மாணிக்கம் (67). இவா் தனது இருசக்கர வாகனத்தில் அருகேயுள்ள முத்தனேந்தல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அங்கு மதுரை- ராமேசுவரம் நான்குவழிச்சாலையை அவா் கடக்க முயன்றபோது அவரது இரு சக்கர வாகனம் மீது அந்த வழியாக வேகமாக வந்த காா் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சூசை மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.