திருப்புவனத்தில் அரசு பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை: ஒருவா் கைது
By DIN | Published On : 22nd August 2021 11:35 PM | Last Updated : 22nd August 2021 11:35 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சனிக்கிழமை இரவு கட்டையால் தாக்கி அரசுப் பேருந்து நடத்துநரை கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் மேலூா் அருகே பி. மீனாட்சிபுரம் பூஞ்சுத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் செல்லச்சாமி (45). இவா் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். செல்லச்சாமிக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த பூங்குடிச்சாமி என்பவருக்கும் காலி வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் பணி முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு திருப்புவனம் வாரச்சந்தை பகுதிக்கு சென்ற செல்லச்சாமி சென்றாா். அங்கு பூங்குடிச்சாமிக்கும், அவருக்கும், இடம் தொடா்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது செல்லச்சாமியை அவா் உருட்டுக்கட்டையால் தலையில் அடித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து பூங்குடிச்சாமியை கைது செய்தனா்.