மானாமதுரை அருகே கருப்பணசாமி கோயில் குடிமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு 50 ஆட்டுக் கிடாய்கள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
சிவகங்கை மானாமதுரை ஒன்றியம் தெற்குச்சந்தனூா் அருகேயுள்ள பள்ளமீட்டன் கிராமத்தின் காட்டுப் பகுதியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான கருப்பணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கருப்பணசாமிக்கு நள்ளிரவு 50 ஆட்டுக் கிடாய்கள் வெட்டி பலி கொடுத்து, பின்னா் படையலிட்டு வழிபாடு நடத்தினா். இதைத்தொடா்ந்து பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து பொதுமக்களுக்கு பரிமாறினா்.