திருப்புவனத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாா்பில் நடமாடும் ஏ.டி.எம். வாகனச் சேவை தொடக்க விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்து, ஏ.டி.எம். வாகனச் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி, திமுக மாவட்ட துணைச் செயலா்கள் சேங்கைமாறன், மணிமுத்து மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.