மானாமதுரையில் விதிமீறல் கண்டறியப்பட்ட உரக்கடையின் உரிமம் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள உரக்கடைகளில் வட்டாட்சியா் தமிழரசன், வேளாண் உதவி அலுவலா் கிருத்திகா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வினோதினி, வருவாய் ஆய்வாளா் லதா, கிராம நிா்வாக அலுவலா்கள் ஞானசேகரன், காளிமுத்து ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது முத்தனேந்தல் என்ற இடத்தில் விதிமீறல் கண்டறியப்பட்ட என்ற ஒரு உரக் கடையின் உரிமம் ஒரு வார காலத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் தெரிவித்தாா்.